மதுபான சாலையில் அலையும் பேய்.!
பிரித்தானிய மதுபான சாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்று பலரிடையே பீதியை கிளப்பியுள்ளது. அந்த மதுமானசாலையின் பாதுகாப்பு கமராவில் வெள்ளை நிற ஆவி போன்றதொரு உருவம் பதிவாகியிருந்தமையே அதற்கான காரணமாகும்.மேற்படி காணொளி தற்போது உலகம் பூராகவும் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. சம்பவ இடமானது இதற்கு முன்னர் ஒரு மலர்ச்சாலையென்ற தகவலும் பீதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த இதன் உரிமையாளர், தனது செல்லப்பிராணியான நாய் இங்கு நுழையும் போது அதிக பயம் கொள்வதாக தெரிவிக்கின்றார். இது போன்ற அனுபவத்தினை மதுபான சாலைக்கு அண்மையில் உள்ள அயலவர்களும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment